சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு மன்னார் அச்சங்குளம் கடற்கரை பகுதியில்

7 / 100 SEO Score

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

22 62ea63f1cab31 copy 1

குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு  உயிர் மாய்த்துக் கொண்டதாக  ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இந்த சம்பவமானது  அச்சங்குளம்   கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட காவலரணில் இன்று (22) காலை 10. மணியின் பின் இடம்பெற்றுள்ளது

சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக  முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்

98a14104 7224 49d7 8850 55751ddd7ec0

பின்னர் மன்னார்  மாவட்ட நீதிபதி வருகை தந்து  சடலத்தை பார்வையிட்டு  விசாரணைகளின் பின்னர்  இன்று மாலை  மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது

உயிரிழந்த கடற்படை சிப்பாய் பெயர் பண்டார வயது 37 மூன்று பிள்ளைகளின் தந்தை என்று தெரிய வருகிறது

குறித்த கடற்படை சிப்பாய்  வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார்  என்று மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *