நீரிழிவு நோய் என்பது உலக அளவில் அதிக தாக்கத்தையும் அதிகளவான மரணத்தையும் ஏற்படுத்துவதாக உலக மருத்துவ தகவல் மையம் கூறுகிறது
உலக அளவில் நீரிழிவு நோயின் விகிதாசாரம்
இந்த நீரிழிவு நோயானது இளம் வயது நடுத்தர வயது வயதானவர்கள் என்று அனைத்து தரப்பினழைரயும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது
2015-16 ஆம் ஆண்டில் 1.29 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்று அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானது. 12 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நீரிழிவு நோயால் 2019ஆம் ஆண்டில் 10.5 லட்சம் பேர்உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நீரிழிவு நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன?
“நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம் அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது போதுமான உடற்பயிற்சியின்மைஇ மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்” என இந்திய நீரிழிவு நோய் வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்
நீரிழிவு நோய் ஒரு வரலாற்றுப் பார்வை
நீரிழிவு நோய் என்பது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என மருத்துவர் ஜேசன் ஃபாங் குறிப்பிடுகிறார்.
கி.மு. 1550ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பண்டைய எகிப்திய மருத்துவ நூலான எபர்ஸ் பாப்பிரஸ், மற்றும் பண்டைய இந்து வேதங்களிலும் நீரிழிவு நோய் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் என்ற பெயர் எப்படி கொடுக்கப்பட்டது? கி.மு 250ஆம் ஆண்டில் மெம்பிஸின் அப்போலோனியஸ் என்ற கிரேக்க மருத்துவர் நீரிழிவு நோய் என்ற பெயரை உருவாக்கினார் அதிக அளவு சிறுநீர் கழித்தல் என்பதுதான் இதன் பொருளாகும். 1675ஆம் ஆண்டில் டயாபடீஸ் என்பதுடன் மெலிட்டஸ் (தேன்) என்ற பதத்தை தாமஸ் வில்லிஸ் என்பவர் சேர்த்தார்.
எனினும், 1797ஆம் ஆண்டு வரை நீரிழிவு நோய்க்கு முறையான சிகிச்சையை யாரும் கண்டறியவில்லை. ஸ்காட்டிஷ் ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் ரோவ், உணவு திட்டம் மூலம் கார்ப்போஹைட்ரேட் அளவை குறைக்கும் முதல் பரிசோதனையை மேற்கொண்டார்.
அபோலி நாயர் பௌஹார்ட் (1806-1886) என்ற மருத்துவர், நீரிழிவு நோயாளிகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த உணவு திட்டத்தை முதன் முதலாக முறைப்படுத்தினார்.
1910ஆம் ஆண்டு நீரிழிவு நோய்க்கு இன்சுலின் பற்றாக்குறைதான் காரணம் என்பதை சர் எட்வர்ட் ஷார்ப் ஷேஃபர் என்பவர் கண்டுபிடித்தார்.
‘இன்சுலா’ என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து இன்சுலின் என்ற ஆங்கில வார்த்தை வந்தது. கணையத்தில் உள்ள லாங்கர்ஹான்ஸ் என்ற திசு கட்டமைப்பின் செல்களில் இன்சுலின் உற்பத்தி செய்வதால் இது அந்தப் பெயரைப் பெற்றது.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஃபிரடெரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் ஜான் மெக்லியோட் ஆகியோர் 1921ஆம் ஆண்டு இன்சுலினை கண்டுபிடித்தனர். பேண்டிங் மெக்லியோட்டுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல் , அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறுகிறது
எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளது இதன் காரணமாக ரத்தத்தின் அதிக குளுக்கோஸ் அளவினால் ரத்த குழாய்களை பாதிக்கலாம்.காலில் தொற்று ஏற்படுதல் மற்றும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பார்வையின்மை, சீறுநீரகம் செயல் இழத்தல் மற்றும் மாரடைப்பு போன்ற உடல் நலக்கோளாறுகள் நேரிடுவதற்கு முதன்மையான காரணியாக நீரிழிவு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உணவு திட்டம் (டயட் ப்ளேன்) மற்றும் உடற்பயிற்சியின் மூலம் நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் அத்துடன் சிறுதானியங்களை சேர்ப்பது
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை பழங்கள் ரத்தத்தில் சக்கரை அளவை அதிகப்படுத்தும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.
ஆரஞ்சு, தர்பூசணி, கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம்
இளம் பெண்களிடம் நீரிழிவு நோய் பரவல் என்பது 2000ஆம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள்
இது குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது
சில நேரங்களில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் அல்லது கோவிட் தொற்று காரணமாகவும்,பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும் போதும் கூட நீரிழிவு நோய் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படும்போது வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்,”
“ஆனால், உடலில் உள்ள இன்சுலினை உருவாக்கும் பீட்டா செல்கள் பாதிப்படைந்தால், அதன் செயல்பாடுகள் குறையும். அப்போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்காது,” என்கின்றனர்
தவிர, முழுமையான இன்சுலின் குறைபாடு இருக்கும்போது நீரிழிவு நோயில் மாற்றம் என்பது சாத்தியமில்லை.
நீரிழிவின் தாக்கம் குறைந்திருக்கின்றதா என்று பார்ப்பதற்கான ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் சோதனையை ஒருவர் நிறுத்தக் கூடாது இவையெல்லாம் மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே செய்யப்பட்ட வேண்டும், சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை மிக முக்கியம்
காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது உடலின் க்ளுக்கோஸ் அளவு வரம்பு 70-100 ஆக இருந்தால் இது வழக்கமான அளவாகும். இந்த வரம்பு 100-125 மில்லி கிராம்களாக இருந்தால் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும் 126க்கு அதிகமாக இருப்பது நீரிழிவு நோய் அறிகுறி என்றும் கணக்கிடப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
“உடல்நல மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. உணவு முறை மற்றும் உடற்பயிற்சியோடு கூடுதலாக, மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்,” என்று நீரிழிவு நோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்
ஒவ்வொருவருக்கும் பொதுவான உணவு திட்டம் இருக்க முடியாது, இது தனிப்பட்ட நபர்களின் உடல் அமைப்பு, உடல் நலத்தின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தது என்று மேலும் அவர் கூறினார். தவிர பிரக்யானந்தாவும், இதே கருத்தை முன் வைக்கிறார். யோகா, பிராணயாமம், உணவு பழக்கங்கள் மூலமே தனது நீரழிவு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்
உணவு பழக்க வழக்கங்கள்
அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை கொண்ட உணவுகளை நீங்கள் உண்ணலாம்
ஆரஞ்சு, தர்பூசணி, கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம்.
பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது ஆலிவ் எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது என சுபஸ்ரீ கூறுகிறார்
சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு மட்டுமின்றி, சோடா, பிஸ்கெட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், கேக் வகைகள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நாம் உட்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாரத்தில் இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பது சிறந்த சிகிச்சை என ஜேசன் ஃபாங் கூறுகிறார். பல நூற்றாண்டுகளாக இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவை விரட்டும் வேப்பிலை
இவை எல்லாவற்றையும் விட நாட்டு வைத்தியமுறைகள் நீரிழிவுக்கு சிறந்த அறிவுரையாக இருக்கிறது அதாவது பகல் முழுவதும் எவ்வளவு சாப்பிட்டாலும் இரவில் மா சத்து கொண்ட உணவுகளை தவிர்த்துக் கொள்வதுடன் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்ளர் அல்லது அரை டம்ளர் வேப்பம் இலை அவித்த நீர் அல்லது வேப்பம் பட்டை அவித்த நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுதர்திக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதுடன் அவ்வாறு வந்தவர்கள் கூட எளிதில் குணம் பெறமுடியும் என்பது சித்த ஆயுள் வேத வைத்தியர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள்
Like this:
Like Loading...
Related