மன்னார் புத்தளம் காங்கேசன்துறை கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு காற்றின் வேகம் தொடர்பாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர எச்சரிக்கையினை விடுத்துள்ளது
இந்த எச்சரிக்கை பதிவானது இன்று மாலை 6.மணியின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரங்களில் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும், மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மன்னார்.