மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

இந்த சடலம் நேற்று (17) இரவு ஏழு மணியின் பின்னர் அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது
அப்பகுதி மீனவர்கள் அச்சங்குளம் கிராம சேவையாளருக்கு அறிவித்ததை தொடர்ந்து கிராம சேவையாளர் முருங்கன் பொலிசார் அச்சங்குளம் கடற்படையினர் குறித்த உடலை பார்வையிட்டனர்
குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும் சிதைவடையாமல் காணப்படும் உடைகளை வைத்து குறித்த ஆண் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
உடலம் நீதிபதி வருகை தந்து பார்வையிடுவதற்காக அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது
சடலம் கரை ஒதுங்கிய அச்சங்குளம் கிராமம் முருங்கன் பொலிஸ் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது