வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த சம்பவமானது நேற்றைய தினம் (13) இடம்பெற்றுள்ளது
குறித்த நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அடித்துச் செல்லப்பட்டுதாக தெரிய வருகிறது
அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார் கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவராவார்
இதில் சடலமாக மீட்கப்பட்டவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த சகோதர்கள் என தெரியவருகின்றது.