இரத்தினபுரியில் நடைபெற்ற தேசிய மட்ட டேக்வொண்டோ போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 52-55 கிலோ மற்றும் 46-49 கிலோ எடைக்குட்பட்ட ...
இரத்தினபுரியில் நடைபெற்ற தேசிய மட்ட டேக்வொண்டோ போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 52-55 கிலோ மற்றும் 46-49 கிலோ எடைக்குட்பட்ட போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்கள்
இந்த போட்டியானது கடந்த 28 மற்றும் 30 திகதிகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்றது
இந்த போட்டியில் 52-55 எடைப் பிரிவில் யோ.சுடர்மதி என்னும் மாணவி இரண்டாம் நிலையை அடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்
மேலும் இப்போட்டியில் 20 வயது பெண்கள் பிரிவில் 49-53 கிலோ எடைக்குட்பட்ட போட்டியில் நா.விதுஷா மற்றும் 46-49 எடைக்குட்பட்ட போட்டியில் ப.தர்சிகா இருவரும் மூன்றாம் நிலையை அடைந்து வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுகொண்டு வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்ததோடு மடு வலயத்தில் மன்ஃதட்சணமருதமடு மகாவித்தியாலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்
அத்துடன் சுடர்மதி எனும் மாணவி மாணவி கடந்த மாதம் இடம்பெற்ற மாகாண மட்ட தடகள போட்டியில் இரண்டு புதிய சாதனைகளை நிலை நாட்டியதுடன் வட மாகாணத்தில் சிறந்த வீராங்கனை யாகவும் தெரிவு செய்யப்பட்டார்
மேலும் 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 4ஏ சித்திகளையும் 2பி சித்திகளையும் 3சி.சித்திகளையும் பெற்று க.பொ.த உயர் தரத்திற்கு தெரிவாகி கல்வியிலும் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலையில் கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறையான போதும் தேசிய ரீதியான போட்டியில் கலந்துகொண்டு மாணவர்கள் சாதித்துக் காட்டியதை பலரும் பாராட்டி நிற்கின்றனர்…
No comments