Page Nav

HIDE

Breaking News:

latest

ஐந்தம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா? -

இணையங்களில் கசிந்த விணாத்தாள்  ஐந்தாம்  வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால் பரீட்சையை மீண்டும்...

இணையங்களில் கசிந்த விணாத்தாள் 

ஐந்தாம்  வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார் 

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

கடந்த 15ஆம் திகதி  நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை  வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து  பரீட்சைகள் திணைக்களம் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை நடத்தியது.

அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்   

விசாரணை முடிவுகளின்படி செயற்படுமாறு ஜனாதிபதியும் அமைச்சரும் ஆலோசனை வழங்கினர் என்று  கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார் 

No comments