Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியா A9 வீதியில் ஏற்பட்ட கோர வித்தில் இரண்டு பேர் மரணம்

வவுனியா A9 வீதி ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர்   சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது  இந்த விபத்தானது ...

வவுனியா A9 வீதி ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர்   சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது 

இந்த விபத்தானது இன்று புதன்கிழமை (18) மாலை  நடைபெற்றுள்ளது 

இந்த விபத்து விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அண்மையில்  வீதியில் நின்ற  ஒருவருடன் மோதி இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் மரணம் 

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனினும் அவர்கள் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த சங்கீதன் வயது 40 மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யோகராசா 42 ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments