யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் தவறான முடிவெடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது இந்த சம்பவமானது நேற்றைய தினம் ஞாயிற்று...
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் தவறான முடிவெடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது
இந்த சம்பவமானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15) நிகழ்ந்துள்ளது
தகவல்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளார்.
தொலைபேசி கேமால் வந்த விணை
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுவன் தொலைபேசியில் கேம் விளையாட தந்தையிடம் தொலைபேசியை கேட்ட போது தந்தை தொலைபேசியை கொடுக்காததால் வீட்டின் அறை ஒன்றுக்குள் சென்று தனது உயிரை மாய்த்துள்ளான்.
மேலும் நெடுந்தீவு பகுதியில் 33 வயதுடைய இளைஞன் ஒருவன் இவ்வாறு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
No comments