Page Nav

HIDE

Breaking News:

latest

கடலில் காணாமல் போன ஆசிரியர் வைஷ்ணவன் தொடர்பாக வெளியான தகவல்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்  நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் போது காணாமல்  போயுள்ள  ஆசிரியர் தயாரூபன் வைஷ்ணவன்  நீண்ட நேரத் தேடுதலின் ...

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்  நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் போது காணாமல்  போயுள்ள  ஆசிரியர் தயாரூபன் வைஷ்ணவன்  நீண்ட நேரத் தேடுதலின் பின்னும் அவர் மீட்கப்படவில்லை

அலை இழுத்துச் சென்றதா?அல்லது அப்பகுதியில் உலாவும் சுறா மீன்கள் எதுவும் தாக்கியதா? என்னும் சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது 

காணாமல் போனவர் சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த 30 வயதுடைய தயாரூபன் வைஷ்ணவன் ஆவார் 

இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என்று தெரிய வருகிறது 

வல்லிபுர ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர் இதன் போது சம்பவ தனமான 19-9-1014  இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து நேற்று இரவு கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி தொடர்ந்தது. நீண்ட நேரத் தேடுதலில் அவர் மீட்கப்படவில்லை. 

குறித்த  சம்பவம்  தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று வரை அவர் தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர் 


No comments