Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு!

நாளை தினம் சனிக்கிழமை நநடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று  காலை 9.15  ...

நாளை தினம் சனிக்கிழமை நநடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று  காலை 9.15  மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டது

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான  திரு க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையிலும் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திரு.வே.சிவராஜா அவர்களின் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

VIDEO

மன்னார் மாவட்டத்தில் உள்ள 98 வாக்குசாவடிகளுக்கு உயர் பாதுகாப்புகளுடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இம்முறை மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக  90607 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்

இதில்  4068 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்று தெரிய வருகிறது

மேலும் தேர்தல் கடமைகளுக்காக 1322 அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகளவிலான பொலீஸ் அதிகாரிகள்  தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments