Page Nav

HIDE

Breaking News:

latest

நாகை, காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை நிறுத்தப்பட்டமைக்கான காரணம்?

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  கப்பலானது நேற்றைய தினம்  வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடு...

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  கப்பலானது நேற்றைய தினம்  வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடுபடவில்லை இதனால் இந்தியா செல்லவும் இலங்கை திரும்பவும் இருந்த பயணிகள்  ஏமாற்றமடைந்தனர் 

காரணம் என்ன?

குறித்த கப்பல் சேவையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உத்தியோப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு  இயங்கி வந்த நிலையில்  இந்நிலையில் நேற்றையதினம் (5) காலை நாகைப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை வந்தடைந்தது.

எரிபொருள் இல்லாததால்

மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகை பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாராகி பயணிகள் அனைவரும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராகிய நிலையில் கப்பலில் போதிய அளவு எரிபொருள் இல்லாததால் குறித்த பயணம் இடை நிறுத்தப்பட்டது என்று தெரிய வருகிறது 

இதன் காரணமாக பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் ஏமாற்றமடைந்து விசனத்துடன் திரும்பிச்  சென்றுள்ளனர் 

No comments