Page Nav

HIDE

Breaking News:

latest

ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்கள்

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்கள் இன்று நள்ளிரவுடன் நிiவுபெறவுள்ளதால் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேம...

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்கள் இன்று நள்ளிரவுடன் நிiவுபெறவுள்ளதால் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,  நாமல் ராஜபக்,ஷ  திலித் ஜயவீர, நுவன் போககே, ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர்.

இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சர்வஜன சக்தியின் வேட்பாளர் திலித் ஜயவீர

சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று  பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

மக்கள் போராட்டம் முன்னணியின் வேட்பாளர் நுவன் போககே

மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மாற்று வீதிகளை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம்  கேட்டுக் கொண்டுள்ளது 


தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டியிடுகின்றனர் பிரச்சார நடவடிக்கைகளுக்கு 34 நாட்கள் வழங்கப்பட்டன தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்குமாறு வலியுறுத்தி ஊடக நெறி கோவையை வெளியிட்டோம் ஒருசில ஊடகங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என்று அவர் தெரிவித்தார் 

கால அவகாசம் நிறைவு 

தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும். வேட்பாளர்களும் இஅவர்களின் ஆதரவாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூக வலைதள பிரஜைகளக்கு எச்சரிக்கை 

தனிப்பட்ட கருத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக் கொண்டு சிவில் பிரஜைகள் சமூக வலைத்தளங்களில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்துக்களை பதிவேற்றம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.


No comments