அனுராதபுரம்-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி அலபத்தாவ சந்தியில் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த பிரதேச சபை உறுப்பினரொருவர...
அனுராதபுரம்-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி அலபத்தாவ சந்தியில் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த பிரதேச சபை உறுப்பினரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பிரதேச சபை உறுப்பினர் படுகாயம் அடைந்துள்ளார் என்று தெரிய வருகிறது
இந்த சம்பவமானது இன்று (22) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை- பத்தாவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கே.எம்.றிஸ்வான் (42 வயது) எனவும் இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரவ்பொத்தானை பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிய வருகிறது
உயிரிழந்தவரின் சடலம் ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
இதேவேளை படுகாயமடைந்தவர் ஜக்கிய மக்கள் சக்தியின் ஹொரவ்பொத்தானை அமைப்பாளரான நிக்கவெவ பகுதியைச் சேர்ந்த என்.எம்.பாசில் ஆசிரியர் எனவும் இவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments