Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் அதிகரிக்கும் வாக்கெடுப்பு வீதம்

நடைபெற்று வரும் இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் பொதுமக்களின் வாக்களிப்பு வீதம்  அதிகரித்த...

நடைபெற்று வரும் இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் பொதுமக்களின் வாக்களிப்பு வீதம்  அதிகரித்து வருவதாக தெரிய வருகிறது 

அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை 48 ஆயிரத்து 751 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான  க.கனகேஸ்வரன்அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் ஆரம்பமாகிய வாக்குப் பதிவு  முற்பகல் 10 மணியை தொடும் வரை 28.2 வீத வாக்குகள் பதிவாகி இருந்தது  

ஆனால் மதியம்  1 மணியளவில்   48 ஆயிரத்து 751 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது 

இந்த தொகையானது  மொத்த வாக்குகளில் 53.8 வீதமாக காணப்படுவதாகவும் மன்னார் மாவட்டத்தில் மிகவும்  சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வருவதாகவும்  மாவட்டச் செயலாளர்   க.கனகேஸ்வரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்  தெரிவித்தார் 


No comments