Page Nav

HIDE

Breaking News:

latest

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் ரணில் விக்கிரம சிங்க கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்கள்  வன்னி  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்கள்  வன்னி  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17)  மதியம் ரணில் விக்ரம சிங்க அவர்களுக்கு  சாள்ஸ் எம்.பியின் ஆதரவாளவர்கள் பொன்னடை போர்த்தி உற்சாக வரவேற்பளித்தனர் 

இதன் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு தங்கள் ஆதரவை மேலும் வெளிப் படுத்தியிருந்தனர்.

அதே நேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்த பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் வினவிய நிலையில் இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


No comments