Page Nav

HIDE

Breaking News:

latest

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சிறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்கமறியலில்  வைப்பதற்கு சாவகச்சேரி நீதிமன்றம்  அதி...


யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்கமறியலில்  வைப்பதற்கு சாவகச்சேரி நீதிமன்றம்  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது 

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டுஇ நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் (26) சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதிவான் அ. யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி  வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவை  எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



No comments