Page Nav

HIDE

Breaking News:

latest

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்

நாட்டுமக்களுக்கு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் மிக முக்கிய பகுதிகள் இங்கு தப்படுகிறது  வாழ்க்கைச் செலவுகள்  குறைக்கப்படும் வ...


நாட்டுமக்களுக்கு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் மிக முக்கிய பகுதிகள் இங்கு தப்படுகிறது 

வாழ்க்கைச் செலவுகள்  குறைக்கப்படும்

வாழ்க்கைச் செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் -கடன் மறுசீரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்வேன் என தெரிவித்துள்ளார்

இன வேறுபாடு முடிவுக்கு 

இன வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வராமல்  நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் என்னை பற்றி காணப்படும் சந்தேகங்களை போக்குவேன் 

நான் மக்களின் நம்பிக்கையை பெற தீர்மானித்துள்ளேன்

ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தயார்.சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக உங்களை எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் ஒரே இலக்குகளை பகிர்ந்துகொள்வதை நீங்கள் காண்பீர்கள்.

நாங்கள் இணைந்து இந்த நாடு எதிர்கொண்டுள்ள சவால்களிற்கு முகம் கொடுக்கலாம் முன்னோக்கி நகர்வதற்கான உரிய மூலோபாயத்தை முன்னெடுக்கலாம்.

இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உண்மையாகவும் சாதகமாகவும் அர்ப்பணித்துள்ளவர்களிற்கு எங்களின் கதவுகள் திறந்துள்ளன என்றார்

சர்வதேச நாணயநிதியத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தை 

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இலங்கையின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக அரசாங்கம் உரிய கடன் வழங்குநர்களுடன் இந்த திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் உரிய கடன் நிவாரணத்தை பெறுவதற்காகவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை எங்களால் பெறமுடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், இந்த கூட்டு ஆதரவின் மூலம் வெற்றியை பெற முடியும் என கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுக்க தயங்கமாட்டோம் 

ஒருவர் தன்னை  சிங்களவர் தமிழ் முஸ்லீம் என அடையாளம் காண்பதற்கு அப்பால் அனைவரும் நாங்கள் இலங்கையர்கள் என பெருமையுடன் அனைவரும் தெரிவிக்கும் நிலை வரும்வரை நாடு முன்னேற முடியாது என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்

இதற்கு அவசியமான அரசமைப்பு பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை  நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.

பன்முகத்தன்மையை மதிக்கும் ஐக்கியப்பட்ட இலங்கையை உருவாக்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்துகின்றோம் இந்த திட்டம் இன,மதம், வர்க்கம்,அடிப்படையிலான பிளவுகளின் யுகத்தினை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை  நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்




No comments