Page Nav

HIDE

Breaking News:

latest

தேர்தல் ஆணைக்குழுவின் "வாக்காளர்களுக்கான வழிப்புணர்வு" செயற்திட்டம்

எதிர்வரும் 21ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ” நேற்று  புதன்கிழமை (18) தேர்தல்கள்...

எதிர்வரும் 21ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ” நேற்று  புதன்கிழமை (18) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. 

தலைமை

இந்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது   தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இ தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இ தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எஸ். அச்சுதன் மற்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ். மாதவ ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.

தேர்தல் நாள் அன்று  கவனிக்கப்பட வேண்டியவை 

இதேவேளை தேர்தலன்று  வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்

பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு 

மேலும் நேற்று  18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதுடன் அமைதி காலம் பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.  எனவே இதனைக் கருத்திற்கொண்டு அச்சு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தேர்தல் தொடர்பான செய்தி வெளியீட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் 

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பில் தெரிவிக்கையில் 

நாடளாவிய ரீதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சுவரொட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இலகுவாக வாக்களிப்பதற்காகவும் இலகுவாக வாக்குச் சாவடிகளை அணுகுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் 

வாக்காளர்களின் உரிமை 

வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா ? அல்லது  மீறப்பட்டுள்ளதாத? எனவும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமது வாக்குரிமை தொடர்பில் கிராம சேவகரைச் சந்தித்துத்  தேர்தல் தொடர்பிலான தகவலினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார் 

வாக்களிப்பை உறுதிப்படுத்த 

வாக்களிப்பதற்காக  அடையாள அட்டை இசாரதி அனுமதிப் பத்திரம் இகடவுச்சீட்டுஇ ஓய்வூதிய அடையாள அட்டைஇ அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கப்பட்ட பத்திரம் இ மத குருமார்களுக்கான அடையாள அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கமுடியும்.

அடையாள  அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை அணுகி தற்காலிக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதிகள்  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது 

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் 

வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்காவிடில் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி விநியோகிக்காமல் இருக்கும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது றறற.நடநஉவழைளெ.பழஎ.டம  என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளமுடியும்

இதற்கு  மேலதிகமாக இயலாமை கொண்டவர்கள் மாற்றுத் திறனாளிகள், வயோதிபர்கள், கர்பிணி பெண்கள், வாக்களிப்பதற்கான  ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. 

கண்பார்வையற்றவர்களுக்கு விஷேட  ஏற்பாடு 

கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர்  வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும்  உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக  வாக்களிப்பதுடன் வாக்குச் சீட்டினை  தொட்டுணரக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் செவிப்புலனற்றவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று  வாக்களிக்கும்  போது சைகை மொழி பிரயோகம்  போன்ற ஏற்பாடுகள் தேர்தல்கள் nஆணைக்குழுவினால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை  முறைமைகள் அனைத்து  நாடு முழுவதும்  உள்ள 13423 வாக்குச் சாவடிகளிலும் பின்பற்றப்படும் என்று தேர்தல்  ஆணையாளர் சமன் ரத்நாயக்கா தெரிவித்தார் 

அனைவரும் வாக்களிக்க வேண்டும் 

வாக்களித்தல் என்பது நாட்டுப் பிரஜைகளின் ஜனநாயக் கடமை எனவே  நாட்டையும் மக்களையும் நிர்வகிக்கும் தலைவரை ஜனநாயக முடுறையில் தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை எவே  வாக்கிக்கத் தகுதியுடையவர்கள் அனைவரும்  தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவினரால் கேட்டுக் கொள்ளப்பட்டது 




No comments