புத்தளம் ஆனமடுவ மிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்து...
புத்தளம் ஆனமடுவ மிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
18 வயது நிம்பிய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என்று தெரிய வருகிறது
குறித்த யுவதி கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ள நிலையில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என முறைப்பாட்டாளரான யுவதியின் பாட்டியினால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த புகைப்படத்தில் உள்ள யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் அல்லது அருகில் உள்ள ஏதேனும் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு ஆனமடுவ பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்
மேலும் இந்த விடயம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments