Page Nav

HIDE

Breaking News:

latest

தேர்தல் முடிவுகள் பொது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் கருத்து

எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ள 2024  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெ...

எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ள 2024  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம்  வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்

வன்முறை உருவாகலாம ;

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவதால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம். எனவே இவ்வாறான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்

பொது மக்களுக்கு அறிவுறுத்தல் 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தங்களது  வீடுகளில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்

No comments