பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ப...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தானது நேற்றய தினம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வீதியில் பயணித்த மற்றுமொரு பேருந்தினை கடந்து செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது
இந்த விபத்தின் போதுஇ மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் அரகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதரிக விசாரணைகளை அப்பகுதி பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments