இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசநாயக்காவே 52.81ம...
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசநாயக்காவே 52.81மூ சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்
இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாஸ 21.79% வாக்குகளைப் பெற்றுள்ளார் மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்க 19.42மூ பெற்றுள்ளார்
வாக்குகள் அடிப்படையில் அநுரகுமார திசநாயக்க 433,237 வாக்குகளையம் சஜித் பிரேமதாஸ 202,944 வாக்குகளையும் ரணில் விக்ரமசிங்க 173,016 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
இதனடிப்படையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 17 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திச நாயக்கவே முன்னிலையில் உள்ளார்
வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாஸ வன்னி மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் 14 மாவட்டங்களில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்
ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் இநுராதபுரம் கேகாலை கொழும்பு கம்பகா மாத்தளை நுவரெலியா மாவட்டங்களில் இரண்டாம் இடத்திலும் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம் நிலையிலும் உள்ளார்
என்றாலும் தொகுதி வாரியான பெறுபேறுகள் வரும் போது இநத இடங்கள் மாற்றமடையும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments