வவுனியா மன்னார் வீதி பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பல...
வவுனியா மன்னார் வீதி பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது
இன்று பிற்பகல் குருக்களுர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்
சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி முற்றிலும் எரிந்துள்ளது
உயிரிழந்தவர் 30 வயதுடைய குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்றும் தெரிவிக்ப்பட்டது
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
JOURNALIST
Parameswaran Kartheeban
Parameswaran Kartheeban
No comments