Page Nav

HIDE

Breaking News:

latest

புகையிரதம் மோதி பெண் பரிதாப மரணம்

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09)...

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  

இதே நேரம் தலைமன்னார் மதவாச்சி புகையிரத வீதியில் நீண்ட நாட்களுக்குப் பின் புகையிரதம் வருவதால் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக  கடக்குமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது 

 JOURNALIST Parameswaran Kartheeban


No comments