Page Nav

HIDE

Breaking News:

latest

யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில் பெண் பலி

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில்  உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது ...

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில்  உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது 

விபத்திற்கு வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் காரணம் என்று தெரிய வருகிறது 

மேலும்  அந்த வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் பரவிக்கிடக்கின்றது 

சம்பவ இடத்துக்கு வ சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்ட்டது 

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர்  உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

மேலும்  இச்சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டுக்கு யாரேனும்  தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் அல்லது  எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்திருக்கலாம் போன்ற  பல கோணங்களில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments