யாழ்ப்பாணம் பளை சாவகச்சேரியில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 94 கிலோ 520 கிர...
யாழ்ப்பாணம் பளை சாவகச்சேரியில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 94 கிலோ 520 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றைய தினம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
சான்றுப் பொருட்கள்
சாவகச்சேரி பகுதியில் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை நிலைநிறுத்த வெத்தலகேணியால் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 04 மூடைகளில் 52 கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சா 94 கிலோ 520 கிராம் எடை கொண்டது. இதன்படி பதுக்கி வைத்திருந்த கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கெப் வண்டி மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. ரூ. 37 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கேரளா கஞ்சா மற்றும் கெப் வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments