Page Nav

HIDE

Breaking News:

latest

பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கைகடற்படையினருடன் பொலிஸார் இணைந்து  மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது  வாகனத்தில்  கடத்திச் செல்லப்பட்ட  பெர...

இலங்கைகடற்படையினருடன் பொலிஸார் இணைந்து  மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது  வாகனத்தில்  கடத்திச் செல்லப்பட்ட  பெருந்தொகை பீடி இலைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

இந்த சம்பவமானது  புத்தளம் கரம்ப வீதித் தடுப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது

இந்த நடவடிக்iகையின் போது   371 கிலோகிராம் பீடி இலைகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது  

வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS தம்பபன்னி நொரோச்சோலை பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது. கராம்ப சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான வேனை சோதனை செய்த தேடுதல் குழுவினர் சுமார் 371 கிலோ எடையுள்ள 11 சாக்கு களில் பீடி இலைகள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர். 

இந்த நடவடிக்கையின் விளைவாக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மேலும் சந்தேகநபர் மற்றும் பீடி  இலைகள்  வேன் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments