Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாந்தை மேற்குப் பகுதியில் 3 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் தள்ளாடி  இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில்  மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினரு...

மன்னார் தள்ளாடி  இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில்

 மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பண்ணிரெண்டு லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

இந்த சம்பவமானது இன்று மாலை 4.45.மணியளவில் மாந்தை மேற்குப் பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் இடம்பெற்றது

குறித்த  நபரால் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட  3 கிலோ 570 கிராம் (2 பார்சல்களுடன்)  அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்  

குறித்த சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டது


No comments