மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளிமலை பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 வயது சிறுமி மரணமடைந்ததுடன் 25 பேர் படு காயமடைந்துள...
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளிமலை பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 வயது சிறுமி மரணமடைந்ததுடன் 25 பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த சம்பவமானது நேற்று (13) வெள்ளிக்கிழமை மதியம் 1.30. மணியளவில் நடைபெற்றுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
முசலி பிரதேசம் சிலாபத்துறைக்கும் அல்லிராணி கோட்டைக்கும் இடையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் இருந்து வாகனத்தில் நானாட்டான் அருவியாற்றங்கரையில் உள்ள அறுகுக் குன்று பகுதியில் உள்ள கிராமத்திற்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளனர் இதன் போது வெள்ளிமலை பிரதான வீதி அருகில் வாகனம் தடம்புரண்டுள்ளது
காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டிகளில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்
எனினும் சிகிச்சை பலனின்றி நான்கு வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் காயமடைந்த ஏனையவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது
No comments