Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய படகுடன் 4 மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம்  கோவலன் கலங்கரை விளக்குப் பகுதிலிருந்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இலங்கை கடற்பரப்பில் அத்த...

யாழ்ப்பாணம்  கோவலன் கலங்கரை விளக்குப் பகுதிலிருந்து இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுடன் 04 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது 

வெளிநாட்டு மீன்பிடி இழுவை படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோவலன் கலங்கரை

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடி இழுவை படகுகளை  வடக்கு கடற்படை கட்டளையினால் அவதானிக்கப்பட்டு வருகிறது இதனடிப்படையில் கோவலன் கலங்கரை விளக்க கடற்பகுதியில்  மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி இழுவை படகுகளை அவர்களது இந்திய கடல் எல்லைக்குள் அனுப்பி வைப்பதற்காக விரைவுத் தாக்குதல் கப்பல் அனுப்பப்பட்டது. 

இந்த நடவடிக்கையின் விளைவாக 01 இந்திய மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டது மற்றும் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து தங்கியிருந்த 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட நடவடிக்கை

கைப்பற்றப்பட்ட இழுவை படகு மற்றும் 04 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன்  அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்த வருடத்தில் கைது செய்யப்பட்டோர் 

இந்த சம்பவத்தில் இதுவரை  2024 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய இழுவை படகுகளையும் 345 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றி சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றது 

No comments