Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியாவில் இதுவரை 30 வீதம் வாக்குப் பதிவு-பி.எ சரத்சந்திர தெரிவிப்பு

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இலங்கையின்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வ...

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இலங்கையின்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்திலும் காலை 7.மணியிலிருந்து வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகிறது  அதனடிப்படையில்  இன்று காலை 10.15 மணி வரை  152 வாக்களிப்பு நிலையங்களில் 30 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரும்  வவுனியா மாவட்ட செயலாளருமான பி.எ சரத்சந்திர தெரிவித்துள்ளார்

இதேவேளை இதுவரை எந்த ஒரு தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கபெறவில்லை  என்றும் தெரிவித்தார் 

மேலும்  இன்று மாலை நான்கு மணியளவில்  அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இருந்து வாக்குப் பெட்டிகள் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு மாலை 4.30 மணியளவில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறும் 

இந்த  செயற்பாடுகளுக்காக  அரச உத்தியோகத்தர்கள் தயாராக உள்ளனர் எனவும் வவுனியாமாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பி.எ சரத்சந்திர தெரிவித்துள்ளார்

OURNALIST
Parameswaran Kartheeban


No comments