வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பொருளாதாரத்தில் நலிந்து ,வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர் அவர்களில் பெண்தலைமைத்துவ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பொருளாதாரத்தில் நலிந்து ,வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்
அவர்களில் பெண்தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களும் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இவர்களது பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியும்,காதுகாப்பும், இல்லாத நிலையையும் அவதானிக்க்க கூடியதாக உள்ளது
இந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்
அதில் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு தற்போதைய ஜனாதிபதியால் தீர்வு தர முடியுமா?மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலமை ?
இதே வேளை இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொழில் வாய்ப்புகள்,வாழ்வாதாரம் இன்றி அன்றாட ஜீவிதத்திற்கு பாரிய சிரமங்களை எதிர் நோக்கும் நிலையை காணக் கூடியதாக உள்ளது
இவர்கள் மன்னார் மாவட்டத்தின் மடு, மாந்தை, நானாட்டான், மன்னார் நகரம், முசலி, போன்ற பிரதேச செயலகங்களிலும் வசிக்கிறார்கள்.இவர்களது குடும்பத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த அங்கவீனமுற்றவர்களும், வயோதிபர்களும், உள்ளார்கள் இவர்களது வாழ்வாதாரம் மிகவும் கேள்விவிக்குரியான நிலையில் உள்ளது
மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா
நாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் இன்றைய தினம் (28) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தொடர்போராட்டம்
யுத்தம் மௌனிக்கப்பட்டதில் இருந்து நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருப்பவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதன்போது பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளோம்.
இலங்கை அரசாங்கமும் சரி, சர்வதேசமும் சரி,எங்களை ஒரு தடவையாவது திரும்பி பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாத முடிவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடி வருகிறோம்.ஆனால் எங்களை ஒருவருமே திரும்பி பார்ப்பதாக தெரியவில்லை.எனினும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.ஆனால் நீதிக்காக ஏங்கி போராடி வருகின்ற அம்மாக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.இதனால் சாட்சிகளும் மறைக்கப்பட்டு கொண்டு செல்கிறது.
(OMP) மீது நம்பிக்கை இல்லை
அதனையே இந்த அரசும் விரும்புகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை (OMP) மாவட்ட ரீதியாக ஸ்தாபித் துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுகின்றனர்.எமது உறவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசு இந்த பணத்தை வழங்குகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஊடாக உண்மையை கண்டறிவோம் என கூறப்பட்டுள்ள போதும் இது வரை உண்மையை கண்டறிய முன் வரவில்லை.ஆனால் இழப்பீடு வழங்குவதற்காக மாத்திரம் முன்னுக்கு வருகின்றனர்.
நாங்கள் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என்பதே ஓ.எம்.பி.யின் நோக்கமாக உள்ளது நாங்கள் அதற்கு ஒரு கேபாதும் சம்மதிக்கப் போவதில்லை
புதிய ஜனாதிபதியால் தீர்வு தர முடியுமா?
எமது பிள்ளையின் உயிர் 2 லட்சம் பெறுமதி இல்லை.எங்கள் பிள்ளைகளை திருப்பி தந்தால் 4 லட்சம் எங்களால் தர முடியும் நாங்கள் இல்லாததை கேட்கவில்லை உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகளையே கேட்கிறோம்
தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் தீர்வு தர முடியுமா?இநாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதி யிடமும் காணாமல் போன எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.நேரடியாக சென்று சந்தித்து கலந்துரையாடி யும் உள்ளோம். ஆனால் இது வரையில் எந்த ஜனாதிபதியும் எமக்கான பதிலை வழங்கவில்லை.
தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் காணாமல் ஆக்கப்பட்ட எம் பிள்ளைகளையும் உறவுகளையும் மீட்டுத் தருவாரா?அல்லது எமது உறவுகளுக்கு நீதி கிடைக்குமா?இஅல்லது இருக்கின்ற இடத்தை கண்டுபிடித்து தருவாரா?இஅந்த எதிர் பார்ப்புக்கள் உடனே இன்று வரை போராடி வருகிறோம்.
சர்வதேசமே தீர்வு தரவேண்டும்
இலங்கை அரசியலில் நம்பிக்கை இல்லை.இவ்வாறான காரணங்களினாலேயே சர்வதேச விசாரணை கோரி போராட்டம் முன்னெடுத்து வருகிறோம். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்
இவர்களை பார்ப்பது யார்?
யுத்தத்தின் மூலம் இளம் விதவைகள் பல ஆயிரம் பேர் உருவாகியுள்ளார்கள் அவ்வாறு மன்னார் மாவட்டத்திலும் பல குடும்பங்கள் உள்ளது இந்த பெண் தலைமைத்துங்களைக் கொண்ட இவ்வாறான குடும்பத்தினர் வாழ்வாதார பிரச்சனைகள் தவிர உடல் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர் கொண்டுள்ளார்கள்
இந்த பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது சில பெண்கள் கூலி வேலைகளையும், கடற்தொழிழல்களையும் செய்து வருகிறார்கள் ஆனால் தங்களது குடும்ப சூழ்நிலையை கொண்டு செல்வதற்கு போதிய அளவு வருமானங்கள் இல்லை
மேலும் இவ்வாறு இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ள பல குடுப்த்தில் பெண்கள், சிறுவர்களின், கல்வி மற்று பாதுகாப்;பு என்பது கவனிக்கப்படாமல் உள்ளதாகவும் அந்த குடும்பத்தினர் பலர் தெரிவிக்கின்றனர்
No comments