Page Nav

HIDE

Breaking News:

latest

கவிமேகம் பிரியநிலாவின் உனக்கென்ன வேணும் சொல்லு நூல் வெளியீடு

கவிஞர் பிரியநிலாவின் 'உனக்கென்ன வேணும் சொல்லு' கவிதை நூல் வெளியீடு  வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில்   எழுத்தாளர்  தமிழ்மணி அகளங்கன...

கவிஞர் பிரியநிலாவின் 'உனக்கென்ன வேணும் சொல்லு' கவிதை நூல் வெளியீடு  வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில்   எழுத்தாளர்  தமிழ்மணி அகளங்கன் அவர்கள் நேற்றைய தினம் (26) தலமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது .


அறிமுக உரையினை கலாநிதி வரதகுமார் அவர்களும் ஆசியுரையினை ஓமந்தை மருதோடை முருகன் ஆலய  பூசகர் தற்போது கனடாவை வசிப்பிடமாக கொண்டவருமான  உதயகுமார் ஐயா அவர்களும் வழங்கியிருந்தார்கள்

நூலின் நயவுரையினை   கற்சிலைமடு அ .த .க பாடசாலை  அதிபர் கம்பீரக்குரலோன் சின்னப்பா நாகேந்திரராசா வழங்கியிருந்தார்

நூலினை  தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வெளியீடு செய்து  முதல் பிரதி வழங்கி வைக்கப்பட்டது

இதனைத்தொடந்து கவிச்சுடர் சிவரமணி அவர்களின் தலமையில்  கவிஞர் பிரியநிலா, கவிஞர்  வரதகுமார், கவிஞர் முல்லைதிவ்யன், மற்றும் கவிஞர் கமலேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றிய கவியரங்கமும் இடம்பெற்றது

இந்த நிகழ்வில்  கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து டிகாண்டார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.


No comments