Page Nav

HIDE

Breaking News:

latest

தலைமன்னாரில் கனிய மணல் பரிசோதனைக்கு மக்கள் எதிர்ப்பு

தலைமன்னார் பியர் பகுதியில் கனிய மணல் பரிசோதனைக்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்  இந்த சம்பவமானது இன்று (22) மாலை...

தலைமன்னார் பியர் பகுதியில் கனிய மணல் பரிசோதனைக்கு அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள் 

இந்த சம்பவமானது இன்று (22) மாலை 3.30 மணியிலிருந்து நடைபெற்று வருவதாக அப்பபுதி மக்கள் தெரித்தார்கள்

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 

மணல் பரிசோதனை செய்யும் உபகரணங்களுடன் தலைமன்னார் பியர் பகுதிக்கு வருகை தந்த ஒரு குழுவினருக்கு தலைமன்னார் பியர் கிராமம் மற்றும் ஸ்ரேசன் பகுதிகளை சார்ந்த மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள் 

அத்துடன்  அப்பகுதிக்கு வருகை தந்த  மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்று அதானி குழுமத்தினருடன் செய்துள்ள ஒப்பந்தத்தினை காண்பித்துள்ளார்கள் மேலும் அப்பகுதியில் தலைமன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளில்  ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது


No comments