Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக் கொடை முகாம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டினை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் நோக்கத்தொடு மன்னார் ரோட்டரி கழகத்தின் ...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டினை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் நோக்கத்தொடு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் R.T,N.சங்கர்  அவர்களின் நினைவாகவும்  மன்னார் வைத்தியசாலை இரத்த வங்கி முகாமையாளர்  Dr. P. P. K. அமரசேகர அவர்களின் மேற்பார்வையிலும் மன்னார் ஆகாஷ் தனியார் விடுந்தினர் விடுதியில் இன்றைய தினம்  9 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியிலிருந்து மதியம் 1.00.மணி வரை மாபெரும் குருதிக் கொடை முகாம்' நடைபெற்றது


மன்னார் ரோட்டரி கழகத்தில் தலைவர் திருமலைராசா தனேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  இளைஞர்கள் யுவதிகள் மற்றும்  தொடர்ச்சியாக குருதி வழங்கும் கொடையாளர்கள் என்று 40க்கும் மேற்பட்டவர்கள்  குதியினை வழங்கியிருந்தார்கள்


இதன்போது குருதிக் கொடையாளர்களுக்கு குருதிக் கொடைக்கான பதிவுப் புத்தகம்  அர்த்தாட்சிப் பத்திரம் மற்றும் நினைவுச் சின்னம் போன்றவை வழங்கி  வைக்கப்பட்டது

மேலதிக புகைப்படங்களை பார்வையிட

மேலும்  இந்நிகழ்விற்கு  மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் மன்னார் அஞ்சல் அலுவலகம்   இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையினர்  முதியோர் நலன் சார்ந்து செயற்படும் டெவ்லிங் நிறுவனத்தினர் மன்னார் ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்களின் பங்களிப்புடன்  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.







No comments