Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் பல விடயங்கள் ஆராய்வு

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது  மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த விவசாயக் குழுக்கூட்டமானது இ...

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது  மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இந்த விவசாயக் குழுக்கூட்டமானது இன்றைய தினம் (21)  மாலை 1.30 மணி அளவில் மன்னார் மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

அந்த வகையில் கடந்த கூட்டக் குறிப்பின் விடயங்களும் அவற்றின் முன்னேற்றங்களும் மாவட்ட விவசாய  குழுக் கூட்டத்தின் அனுமதி பெற வேண்டிய விடயங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கமநல அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் செட்டியார்  கட்டை  அடம்பனுக்கு சட்டவிரோதமாக நீர் எடுக்கும் வாய்க்காலினை மூடுவது தொடர்பான விடயங்கள் வங்கிகளின் விவசாயம் சார் செயற்பாடுகள் விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள்    விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் தொடர்பான விடயங்கள் கால்நடை பராமரிப்பு பற்றிய செயற்பாடுகள் வங்கி செயற்பாடுகள்  மற்றும் பனை அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்திற்கு  பிரதேச செயலாளர்கள் மாவட்ட விவசயப்பனிப்பாளர் நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர்  பல்துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் விவசாய அமைப்புகளின் தலைவர் செயலாளர் பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


No comments