Page Nav

HIDE

Breaking News:

latest

பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதனுக்கு புதிய பதவி

மன்னார் சின்னக்கடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஜோசப் அமுதன் டானியல் சத்தியப்பிரமாண  மொழிபெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) செவ்...

மன்னார் சின்னக்கடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஜோசப் அமுதன் டானியல் சத்தியப்பிரமாண  மொழிபெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) செவ்வாய்க்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 


மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிவரும் ஜோசப் அமுதன் டானியல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை உள்ளவர் என்பதுடன் ஆங்கில உயர் தேசிய டிப்ளமோ, கணனி அறிவியலில் இளமானி (BSc.), பட்டப்பின் பட்டயக் கல்வி (PGDCA), சமூகவியலில் முதுமாணி(MA), உட்பட 12 பட்டயக் கல்வி நெறிகளை பூர்த்தி செய்துள்ளார். 

சமூக அக்கறையுடன் செயற்பட்டு வரும் இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீட இரண்டாமாண்டு மாணவருமாவார். 

சிறந்த கலைஞர் 

மன்னார் அமுதன் சிறுவயதிலிருந்து கலைத்துறையில்யில் இடுபட்டு பல நூல்களை வெளியிடு செய்துள்ளார் சமூக மட்டத்தில் நல்ல ஆளுமையாக  அடையாளம் காணப்;படட்டுள்ள இவர் பல விருதுகளுக்கு செ;ந்தக் காரர் ஆவர் 

சமூக சேவையாளர் 

மன்னார் அமுதன் இலக்கியத்துறையில் எவ்வாறு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்தியுள்ளாரோ அதே போல் சமூக சேவையிலும் தன்னை நிலை நிறுத்தி செயற்பட்டுவபவர் என்பதுடன் மன்னார் தமிழ்ச் சங்கத்தில் இவரது செயற்பாடுகள் அளப்பரியது 

வடமாகாண இளங்கலைஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள அமுதன் விட்டுவிடுதலை காண், அக்குரோணி, அன்னயாவினும், ஒற்றையானை ஆகிய நான்கு நூல்களையும் ABOVE ALL குறும்படம், Mannar - Our Land Our Right என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments