Page Nav

HIDE

Breaking News:

latest

இந்திய மீன்பிடி படகில் வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்தியா மீனவர்களுக்கு சொந்தமான இழுவைப் படகு ஒன்றில் இலங்கைக்கு வந்த இலங்கையை சேர்ந்த நபரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்  குறித்த நபரை வென்ன...

இந்தியா மீனவர்களுக்கு சொந்தமான இழுவைப் படகு ஒன்றில் இலங்கைக்கு வந்த இலங்கையை சேர்ந்த நபரை கடற்படையினர் கைது செய்துள்ளனர் 

குறித்த நபரை வென்னப்புவ க
டற்கரையில் வைத்து நேற்றைய தினம் (10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஒருங்கிணைந்த நடவடிக்கை 

கடற்படை மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம்  ​​இவர்  10 ஆம் தேதி இந்திய மீன்பிடி படகு மூலம் வென்னப்புவ தல் டெகா (கடவத்தை) கரைக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் 

புலனாய்வுத் தகவல் 

கடற்படை புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் வென்னப்புவ பொலிஸார் தல் தேகா கரையில் இரகசியமாக இறங்க முயன்ற நபரை கைது செய்தனர். 

போதைப் பொருள் கடத்தல் 

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக இந்தியாவில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சட்ட நடவடிக்கை

இதேவேளை குறித்த சந்தேக நபர் மற்றும் இந்திய இழுவை படகு தொடர்பாக  வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர் மற்றும் இந்திய மீன்பிடி படகு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்று கடற்படையின் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது 

விஷேட பாதுகாப்பு

கடல் வழியாக  நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக கடற்படையினர் 24 மணி நேரமும் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments