Page Nav

HIDE

Breaking News:

latest

பெருந்தொகை கடத்தல் பொருட்களுடன் 4 சந்தேக நபர்கள் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

புத்தளம் சின்னபாடு கடற்பரப்பில் 1177 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கடத்த முயன்ற 04 சந்தேக நபர்களை கடற்ப...

புத்தளம் சின்னபாடு கடற்பரப்பில் 1177 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கடத்த முயன்ற 04 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நேற்று  13.02.2024 புத்தளம் சின்னபாடு கடற்பரப்பில்  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 1177 கிலோகிராம் (ஈரமான எடை) மற்றும் 150 பூச்சிக்கொல்லி போத்தல்கள் கொண்ட டெண்டு இலைகளை கடத்த முற்பட்ட 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

கடத்தலுக்குப் பயன்படுத்திய   02 டிங்கி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 42 வயதுக்குட்பட்ட கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் பூச்சி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் கட்டுநாயக்கவில் உள்ள சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

02 டிங்கி படகுகளும் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது


No comments